தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் புதிய தலைவர் கிளெட்டஸ் பாபு, செயலாளர்
சதாச்சரம், மற்றும் பொருளாளர் சிவகாமி ஆகியோர் நிருபருக்கு அளித்த
பேட்டியில் கூறியதாவது.
கால் பந்து விளையாட்டை பார்க்க தேவையான அனைத்து பணிகளும்
துரிதப்படுத்தப்படும். இந்த விளையாட்டு கிராமம் வரை சென்றடைய முயற்சிகள்
மேற்கொள்வோம். கால்பந்து அலுவலகத்தில் தொழில்முறைக்கு ஏற்படி அனைத்து
வசதிகளும் செய்து தரப்படும்.
பள்ளி கால்பந்து போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாநில
அளவில் போட்டிகள் நடத்தப்படும்.
தமிழகத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும்.
விஷன் இந்தியா திட்டம் வாயிலாக தமிழகத்தில் கால்பந்து விளையாட்டு வளர்ச்சி பெறும்.
இவ்வாறு புதிய நிர்வாகிகள் கூறினர்.



Leave a Reply