சென்னை : ரயில் இண்டர்நெட் டிக்கெட், எலக்டரானிக் டிக்கெட் எடுப்பதில் சந்தேகம் இருப்பின், 25300000 என்ற தொலைபேசி எண்ணில் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு முன்பு டெல்லி தொலைபேசி எண்ணுக்குப் போன் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரயில்வேயில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இண்டர்நெட் முறை (ஐ-டிக்கெட்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில், இந்தியன் ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேசன் (ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு டிக்கெட் பதிவு செய்யலாம். பிறகு இண்டர்நெட் டிக்கெட் டெல்லியிலிருந்து வீட்டுக்கு கூரியரில் அனுப்பி வைக்கப்படும். கூரியர் வந்து சேர்வதில் பிரச்சினை ஏற்பட்டால் பயணம் தடைபடலாம்.
அடுத்து இ-டிக்கெட். ஓராண்டுக்கு முன்பு எலெக்ட்ரானிக் டிக்கெட்டிங் முறை அதாவது இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் முன்பதிவு டிக்கெட் பெற முடியும். டிக்கெட்டிற்கான பணம் ஏ.டி.எம் கார்டு அல்லது கடன் அட்டையிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.
இவ்வகை ‘இ-டிக்கெட்’, ‘ஐ-டிக்கெட்’ பற்றிய சந்தேகங்களுக்கு முன்பு டெல்லியைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், இப்போது சென்னையின் வாடிக்கையாளர் மையத்தின் 25300000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் சந்தேகங்களுக்கு தமிழில் விளக்கம் பெறலாம். இந்த எண்ணில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்பு கொள்ளலாம். இதில் மாநில மொழிகள் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் பதில் கிடைக்கும்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply