விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கருவனூர் கிராமத்தில் ஊராட்சி
சார்பில் கடந்த மாதம் 28ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45 பேரின் பார்வையும் பறிபோனது என்ற
விஷயம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.
பார்வை பறிபோனதற்குக் காரணம் சொட்டு மருந்துகளா என்பதைக் கண்டறிய அவை
சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவு தெரியும் வரை அந்த
மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற
வேண்டும். பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவர்கள் இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. அதோடு போதிய வசதி
இல்லாத ஒரு கிராமத்தில் நடத்தியதும் தவறு.
முழுமையாக பார்வை இழந்தவர்களுக்கு ரூ.5லட்சமும், ஒரு கண்ணில் மட்டும்
பார்வை இழந்தவர்களுக்கு ரூ.1லட்சமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர்
அறிவித்திருக்கிறார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply