முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பெட்ரோல் பங்குகளுக்கும் ஞாயிறு விடுமுறை

பெட்ரோல் பங்குகளுக்கும் ஞாயிறு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் 3300 பெட்ரோல் பங்குகள் உள்ளன. அதிகரித்து வரும் வாகனங்களால் எரிபொருள்களின் பயன்பாடு சுமார் 40% அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்ட பல தனியார் நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக மூடப்பட்டுவிட்டதால் வாகன ஓட்டிகள் அனைவரும், இந்திய அரசு எண்ணை நிறுவனங்களின் டீலர்களையே நாடிவரும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றனர்.

இது குறித்து பேச்சு வார்த்தை, தமிழ் நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கண்ணன் தலைமையில் நேற்று சேலத்தில் நடைபெற்றது.

அதன் படி தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளின் வேலை நேரத்தைக் குறைக்க சங்க பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறை எனவும் மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பங்குகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

இது செப்டம்பர் மாதம் 15ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்ககப்படுகிறது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.