முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நவீன பேட்டரி கார் வண்டலூரில் அறிமுகம்!

நவீன பேட்டரி கார் வண்டலூரில் அறிமுகம்!

சென்னை : வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, கழுதைப்புலி உள்பட அரியவகை விலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக உள்ளது.

இவைகளைக் காண தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் குழந்தைகள் வருகின்றனர்.

விலங்குகளைச் சுற்றிப் பார்க்க எற்கனவே சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்ட்டு வருகிறது. அதோடு யானை சவாரி திட்டமும் நடைமுறையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து பார்வையாளர்களைக் கவரும் வகையில் வெளிநாட்டு உயிரியல் பூங்காவில் இருப்பது போல் விலங்குகளை பார்வையிட நவீன ரக பேட்டரி கார் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கென்று 5 பேட்டரி கார்கள் வாங்கப்பட்டு பூங்காவில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு காரில் 10 பேர் செல்ல முடியும். இதற்கான கட்டணம் இன்னும் முடிவாகவில்லை. காரை ஓட்ட பூங்கா ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.