சீனத் தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நம் நாட்டைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
முதலில் துப்பாகிச் சுடுதல் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி பெருமை சேர்த்தவர் அபிநவ் பிந்த்ரா.
இந்நிலையில் அடுத்த சாதனையாளர் வரிசையில் மல்யுத்த போட்டியில் வென்று இந்திய நாட்டுக்கு வெண்கலம் வாங்கித்தந்து சாதித்திருக்கிறார், சுஷில்.
கஜகஸ்தான் வீரர் லியோனிட் ஸ்பிரிஇடானவை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் சாய்த்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்துக்களுடன் பரிசு மழை குவிகிறது சுஷீலுக்கு!
இரயில்வேயில் டிக்கெட் இன்ஸ்பெக்ட்டராக பணிபுரியும் இவரை ‘துணை கமர்ஷியல் மேனேஜராக’ பதவி உயர்த்துவதாக அறிவித்துள்ளார், மத்திய அமைச்சர் லாலு.
அரியானா அரசு 25 லட்சமும், டில்லி அரசு 50 லட்சம் பரிசு வழங்க இருக்கின்றன!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply