புதுடெல்லி: ஹீரோ ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களுக்கான விலையை மீண்டும் ரூ.1000 வரை அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஏப்ரல் மாதத்தில்தான் விலையை ரூ.1000 வரை இந்நிறுவனம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இருசக்கர வாகனங்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை, சென்ற மூன்று மாதங்களாக மிகவும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
நிறுவனத்தின் லாப வரம்பை நிலை நிறுத்தும் வகையில் வாகனங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது” என்றார்.
பெட்ரோல் விலையும் ஏறுது, பைக் விலையும் ஏறுது… ஒண்ணுமே புரியல!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply