சென்னை: வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணி வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தனது அறிக்கையில் கூறியுள்ளார்,
வாக்காளர் அடையாள அட்டை சரி பார்க்கும் பணிக்கான ஏற்பாடுகளை ஊழியர்கள் செயல்படுத்துவதற்கு வசதியாக இந்தக் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
தற்போது வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இதில் ஓரு வாக்கு சாவடி அதிகாரி வாக்காளர் பட்டியலில் பெயர்
விடுபட்டவர்களுக்கு படிவங்களை தராமல் அரசியல் கட்சி அதிகாரி ஓருவரிடம் கொடுத்தது கண்டறியப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர், வாக்குச் சாவடி அதிகாரியிடம் படிவம் 6(001ஏ) படிவத்தை பெற்று தனது பெயரை இடம் பெற முயற்சி செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிக்காக செல்லும் வீடுகளில் அங்கு
சென்றதற்கு அடையாளமாக அத்தாட்சி ஸ்டிக்கர் ஓட்டப்பட வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு சரிபார்ப்பு பணி முழுமைசயாக நடைபெற கால அவகாசத்தை 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கையும் விடுத்துள்ளார், பணியில்
அலட்சியம், கடமையை சரிவர செய்ய தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply