
திருப்பதி: திருப்பதியில் சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த நடிகை ஸ்ரேயா, கோயில் வளாகத்தை விட்டு வெளியேறிய போது தன்னை கட்டியணைக்க முயன்ற வாலிபரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கு வருடப்பிறப்பு தினமான நேற்று அதிகாலை திருப்பதி வந்த நடிகை ஸ்ரேயா, அங்கு சுப்ரபாத தரிசனம் செய்தார். பின்னர் காலை 3.45 மணிக்கு கோயிலை விட்டு வெளியே வந்தார்.
அப்போது ஸ்ரேயாவை அடையாளம் கண்டு கொண்ட ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து, கட்டியணைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரேயா அவரது கன்னத்தில் அறைந்து விட்டார்.
உடனே ஸ்ரேயாவின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால் ஸ்ரேயா இதுகுறித்து புகார் அளிக்காததால், சில்மிஷம் செய்ய முயன்ற இளைஞர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் அந்த இளைஞர் திருமலையில் துப்புரவு பணிசெய்து வரும் ஹரி என்பது தெரியவந்துள்ளது.
அந்த இளைஞர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதால் தான் அவரை அறைந்ததாகவும், இதுபோன்ற சம்பங்கள் ஏற்படும் போது பெண்கள் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும் என நடிகை ஸ்ரேயா கூறியதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
-எஸ்.எஸ்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply