முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ராவண்: மூன்று மொழிகளில் மணிரத்னம் இயக்கும் படம்

ராவண்: மூன்று மொழிகளில் மணிரத்னம் இயக்கும் படம்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இந்தியில் அபிஷேக், கோவிந்தா நடிக்கிறார்கள். அபிஷேக் பச்சன் பாத்திரங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விக்ரம் நடிக்கிறார்.

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ராவண் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் இது ராவணன் என வரக்கூடும்.

மூன்று மொழிகளிலும் ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி. மற்றும் கோவிந்தா நடிக்கும் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். மற்றொரு முக்கிய பாத்திரத்தில் கார்த்திக் மற்றும் பிரியாமணி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு மணகண்டன்.

இந்தப் படத்தை ரூ.120 கோடி செலவில் அனில் அம்பானியுடன் இணைந்து தயாரிக்கிறார் மணிரத்னம். மத்தியப் பிரதேச காடுகளில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.