ஐதரபாத்தில் ‘மல்லப்புவ்வூ’ தெலுங்கு படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் பங்கேற்ற இளையராஜா, “பறவை பறப்பது போல் கம்யூட்டரில் வரையலாம். ஆனால் நிஜமாகப் பறவை பறந்தால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் இதுவும்…” என்றார்.
எதற்கு, எதனை ஓப்பிட்டுப் பேசினார், என்கிறீர்களா?
“இன்றைய இசையமைப்பாளர், எப்படி இசையமைக்கிறேன், எப்படி மெட்டு அமைக்கிறேன் என்பதை பேட்டிகளில் கூறுகிறார்கள். அனைத்து இசை அமைப்பாளர்களுமே இசையை உருவாக்க முயல்கிறார்கள். ஆனால் நான் உருவாக்குவதில்லை. அது தானாகவே எனக்குள் நுழைகிறது” என்கிறார், இளையராஜா.
இப்படத்தை முரளி கிருஷ்ணா மற்றும் பூமிகா நடிக்க, சமுத்ரா இயக்கி உள்ளார்.
இப்படத்தில் இளையராஜாவின் இசையில் 8 பாடல்களுமே தித்திக்கும் ரகம்.
இசைக்கு மொழி ஏது?
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply