முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நீரிழிவு நோய் வராமல் தடுக்க வல்லது சாமந்திப்பூ தேநீர்!

நீரிழிவு நோய் வராமல் தடுக்க வல்லது சாமந்திப்பூ தேநீர்!

நியூயார்க் :  நாம் உண்ணும் உணவுடன் சேர்ந்து சீமை சாமந்திப் பூவில்
தயாரான மூலிகை தேநீரையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் நம்மை அண்டவே
அண்டாதாம்.

சாமந்திப்பூ தேநீர் அருந்துவதால் நீரிழிவு நோய் வராது, மேலும் நீரிழிவு
நோயினால் ஏற்படும் பார்வையிழப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் சிறுநீரக
கோளாறு போன்றவையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர், ஜப்பான்
ஆராய்ச்சியாளர்கள்.

ஆராய்ச்சியாளர்கள் மேலும் பேசுகையில்,

“உலகளவில் டைப்-2 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை
அதிகமாகி உள்ளது.

ஜலதோஷம், மாதவிலக்குக் கோளாறுகள், மன அழுத்தம் என்று பல பிரச்சனைகளைப்
போக்க சீமை சாமந்திப்பூ பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில் நாம் உண்ணும் உணவுடன் சாமந்திப்பூவில் தயாரான மூலிகை
தேநீரையும் சேர்த்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் வரவே வராது.

இவ்வகை பரிசோதனையை எலிகளிடத்தில் செய்துப் பார்த்ததில் அவற்றின்
ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பரிசோதனைகளின் மூலம் இவை உறுதி
செய்யப்பட்ட விட்டால் சாமந்திப்பூவிற்கும் கடும் கிராக்கி ஏற்படலாம்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.