இனி தமிழ்நாட்டுச் சாம்பாரில் மியான்மர் துவரம் பருப்பு!
உலக அளவில் இந்தியாதான் 80% துவரையை உற்பத்தி செய்து முன்னணியில் இருக்கிறது. அடுத்து மியான்மரும், தான்சானியாவும் உள்ளன.
ஆனால் தற்போது அதிகரித்து வரும் தட்டுபாட்டைச் சமாளிக்க, மியான்மரிலிருந்து துவரை இறக்குமதி செய்யப்பட உள்ளது.
லெமன் மற்றும் ஷ்வெபோ எனும் இருவகை துவரையில், 21,000 மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் முடிவு செய்யபட உள்ளது,
நம் மாநிலம் வெளியிலிருந்து நேரடியாகத் துவரையை இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை, இரண்டாம் வகை துவரம் பருப்பு மதிய உணவு மையங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது வினியோகத் திட்டத்திலும் துவரை வழங்கப்பட உள்ளது.
தற்போது சந்தையில் துவரம்பருப்பு கிலோ 45 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையும், பொது வினியோகத்திட்டத்தில் ரூ.32க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply