
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகத்தில் இன்று சுணக்கமான நிலை நிலவுகிறது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பின்னர் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 புள்ளிகள் குறைந்தது. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்து வருகின்றன.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 269 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,488.00 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4686.20 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 3.57, பி.எஸ்.இ. 500- 69.73, சுமால் கேப் 4.81 புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் 907 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1090 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 61 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆசிய பங்குச் சந்தையில் முக்கியமான பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்து உள்ளன. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு துவங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் சூழ்நிலையை பொறுத்து, இங்குள்ள பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
-லைவ் நியூஸ் சர்வீஸ்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply